Publish Date: Sat, 24 Nov 2018 (17:36 IST)
Updated Date: Sat, 24 Nov 2018 (17:51 IST)
பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருந்த போது ஏற்பட்ட தகராறில் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் என்றாலே தொட்டத்துக்கெல்லாம் துப்பாக்கி ஏந்தியும் குண்டுகள் வெடிக்கும் நாடாகவே அறியப்பட்டதாக உள்ளது.
இந்நிலையில் சிறுவர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்படவே அது பெற்றோர்களிடத்தில் சென்றது. சிறுவர்களின் பெற்றோர்களும் தாம் வைத்திருந்த துப்பாக்கியால் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டனர். இந்த தாக்குதலில் ஏழு பேர் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.