Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தக்காளி போன்ற உருவத்தில் புதிய கிரகம்! – விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!

Advertiesment
தக்காளி போன்ற உருவத்தில் புதிய கிரகம்! – விஞ்ஞானிகள் ஆச்சர்யம்!
, வியாழன், 13 ஜனவரி 2022 (11:32 IST)
விண்வெளியில் தக்காளி போன்ற உருவம் கொண்ட புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் பல நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் ஈடுபட்டு வரும் நிலையில் பல கோள்களையும், நட்சத்திரங்களையும் கண்டறிந்து வருகின்றன. பெரும்பாலும் கண்டறியப்படும் நட்சத்திரங்கள், கோள்கள் அனைத்தும் கோள வடிவிலேயே இருக்கும்.

ஆனால் முதன்முறையாக தக்காளி வடிவிலான கோள் ஒன்றை வானியல் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமியிலிருந்து 1500 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள இந்த கிரகத்திற்கு வாஸ்ப் 103பி என பெயரிடப்பட்டுள்ளது. சூரியனை விட பெரிதாக உள்ளதாக கணிக்கப்பட்டுள்ள இந்த கோள் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகரிக்கும் கொரோனா: மோடி இன்று அவசர ஆலோசனை!