Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஃபேஸ்புக் நேரலையில் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி: ரசித்து பார்த்த 40 பேர்!

ஃபேஸ்புக் நேரலையில் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி: ரசித்து பார்த்த 40 பேர்!

ஃபேஸ்புக் நேரலையில் பலாத்காரம் செய்யப்பட்ட பள்ளி மாணவி: ரசித்து பார்த்த 40 பேர்!
, புதன், 22 மார்ச் 2017 (12:49 IST)
15 வயது பள்ளி மாணவி ஒருவரை ஃபேஸ்புக் நேரலையில் 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. இதனை 40 பேர் லைவ்வாக பார்த்த கொடுமையும் அரங்கேறியுள்ளது.


 
 
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வசிக்கும் சிறுமி ஒருவரை ஃபேஸ்புக் நேரலையில் 6 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்வது போன்ற வீடியோ இளையத்தில் வெளியானது. ஆனால் இந்த வீடியோவை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த 40 பேரில் ஒருவர் கூட இது குறித்து போலீஸில் புகார் அளிக்கவில்லை.
 
சிறுமியின் தாய் தனது மகளை காணவில்லை என புகார் அளித்த பின்னர் தான் சிறுமியை மீட்டு போலீசார் தாயிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருந்தாலும் அந்த ஆறு பேரில் ஒருவர் கூட இன்னமும் கைது செய்யப்படவில்லை. இதனையடுத்து அந்த வீடியோவை ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது நீக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரட்டை இலை சின்னம் முடக்கம்? - கசிந்த தகவல்