Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு ! 6 பேர் படுகாயம்

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கிச் சூடு ! 6 பேர் படுகாயம்
, வியாழன், 29 செப்டம்பர் 2022 (22:29 IST)
அமெரிக்க நாட்டில் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பள்ளியில் இன்று நடந்த துப்பாக்கிச் சூட்டில்   6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டில் வடக்கு கலிபோர்னியா,  ஓக்லாந்து ஆகிய பகுதியில்  பள்ளியில் இருந்து இடை நின்ற மாணவர்களுக்கான  ஒரு பள்ளி இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளியில் இன்று ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து, அங்கிருந்தவர்களை நோக்கிச் சுட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீஸர் தேடி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாட்டின் அமைதியைக் குழைக்க யாருக்கும் அனுமதியில்லை-ஈரான் அதிபர்