Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் மீது போர் தொடுப்போம்: சவுதி எச்சரிக்கை!!

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (20:55 IST)
உள்நாட்டு போர் காரணமாக ஈரான் மீது போர் தொடுக்க தயங்கமாட்டோம் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது.


 
 
ஏமன் நாட்டில் சன்னி பிரிவை சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. 
 
அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்பட்டு வருகிறது. ஹவுத்தி கிளர்ச்சி படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
 
இதனால் ஈரன் மற்றும் சவுதி அரேபியா இடையே ஏவுகணை தாக்குதல் அடிக்கடி நடக்கிறது. சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை வீசப்பட்டது. 
 
இது தொடர்பாக சவுதி அரேபிய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது, ஹவுத்தி கிளர்ச்சிப் படையினரிடம் ஏவுகணை தொழில்நுட்பம் கிடையாது. ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல் முயற்சியில் ஈரான் ராணுவம் பின்னணியில் இருக்கிறது. 
 
இதனை சவுதி மீது தொடுக்கப்பட்ட போராகவே கருதுகிறோம். அதன்படி ஈரான் மீது போர் தொடுக்க தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments