Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு கிடைத்த உலகளாவிய கெளரவம்: யுனெஸ்கோவுகு முதல்வர் நன்றி

Webdunia
புதன், 8 நவம்பர் 2017 (20:38 IST)
ஐக்கிய நாடுகளின் அமைப்புகளில் ஒன்றான யுனெஸ்கோ, சென்னை நகரை சிறந்த படைப்பாக்க நகரங்கள் பட்டியலில் இணைத்துள்ளது. இதற்காக யுனெஸ்கோவுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்


 


கிரியேட்டிவ் சிட்டீஸ் என்று கூறப்படும் படைப்பாக்க நகரங்கள் பட்டியலை யுனெஸ்கோ அமைப்பு தயாரித்து வருகிறது. அதில் பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்புக்கு கௌரவம் தெரிவிக்கும் வகையில் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் சென்னையை இந்த ஆண்டு யுனெஸ்கோ இணைத்துள்ளது. இது சென்னை மக்களுக்கு கிடைத்த உலகளாவிய கெளரவமாக பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு கிடைத்த கெளவரம் குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, 'பாரம்பர்ய இசைப் பங்களிப்புக்காக யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம் பெற்றதற்காகச் சென்னை மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பர்ய இசைக்கு சென்னை அளித்துள்ள பங்களிப்பு விலைமதிப்பற்றது. இது நமது நாடே பெருமைகொள்ளும் தருணம்' என்று கூறியுள்ளார். ஜெய்ப்பூர், மற்றும் வாரணாசி ஆகிய இந்திய நகரங்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments