Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானுக்கு அள்ளி வழங்கிய இளவரசர் இன்று டெல்லி வருகை!

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (08:02 IST)
புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 44 பேர் பலியானதால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பாகிஸ்தான் மீது கடுங்கோபத்தில் இருந்தனர். பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி, பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க தடை உள்பட பல அதிரடி நடவடிக்கைகளும் இந்திய தரப்பில் எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த சவுதி அரேபியா இளவரசர் சல்மான், பாகிஸ்தான் நாட்டில் 20 பில்லியன் டாலர் புதிய முதலீடு செய்வதாக அறிவித்தார். அதுமட்டுமின்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கன் வேண்டுகோளின்படி பல்வேறு குற்றச்செயல்களுக்காக சவுதி அரேபியா சிறையில் இருக்கும் 2107 பாகிஸ்தானிய கைதிகளை விடுதலை செய்யவும் ஒப்புக்கொண்டார். சவுதி அரேபிய இளவரசரின் இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று சவுதி அரேபிய இளவரசர் சல்மான் இன்று டெல்லி வருகிறார். அவர் இன்று பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இன்றைய சந்திப்பின்போது சவுதி அரேபியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே தீவிரவாத எதிர்ப்பு, பணப்பரிமாறம் குறித்த தகவல்களை பரிமாறிக் கொள்வது , உளவுத்துறை தகவல்களைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்று அந்நாட்டு தலைவர்களை சந்தித்து இரு நாட்டிற்கு இடையே நெருக்கமான நட்புறவுக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments