Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா முடிவு

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (16:37 IST)
வரும் 2018ஆம் ஆண்டு முதல் விளையாட்டு மைதானங்களுக்கு பார்வையாளர்களாக பெண்களை அனுமதிக்க சவுதி அரேபியா அரசு முடிவு செய்துள்ளது.


 

 
சவுதி அரேபியா அரசு தற்போது பெண்களுக்கு உரிமை வழங்குவதில் ஆர்வம் செலுத்தி வருகிரது. பெண்களுக்கு கடுமையான சட்டம் இருந்து வந்த சவுதி அரேபியா நாட்டில் தற்போது மெல்ல மெல்ல சட்டம் தளர்ந்து வருகிறது. அண்மையில் பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமம் வழங்க முடிவு செய்தது அதற்கான ஆணையும் வெளியிடப்பட்டது. 
 
தற்போது விளையாட்டு மைதானங்களுக்கு பெண்களை பார்வையாளர்களாக அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. விஷன் 2030 என்ற திட்டம் உருவாக்கப்பட்டு பொருளாதாரம் மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
அதன்படி பெண்கள் வேலைவாய்ப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் பள்ளிகளில் மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. சவுதி அரேபியாவின் இந்த செயல்களுக்கு உலகம் முழுவதும் உள்ள பெண் உரிமை அமைப்புகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments