Webdunia - Bharat's app for daily news and videos

Install App

397 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் வானியல் அதிசயம்! – நெருங்கி வரும் கோள்கள்!

Webdunia
செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:41 IST)
சூரிய குடும்பத்தின் மிகப்பெரும் கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் பூமிக்கு மிக நெருக்கத்தில் வர உள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் வானில் நிகழும் அதிசயங்கள் ஏராளமானவை. அவற்றில் சில மக்களிடையே மிகவும் உற்றுநோக்கப்படும் ஒன்றாக இருக்கிறது. அவ்வகையில் இந்த ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம், விண்கல் பயணம் ஆகியவற்றை தொடர்ந்து மற்றுமொரு வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது.

சூரிய மண்டலத்தில் பெரிய கோள்களான வியாழன் மற்றும் சனி ஆகியவை சுற்றுவட்ட பாதையில் பூமிக்கு அருகே தாண்டி செல்ல உள்ளன, இந்த அரிய வானியல் நிகழ்வு சுமார் 397 ஆண்டுகளுக்கு முன்னதாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. அவ்வாறு இரு கோள்களும் கடந்து செல்கையில் பெரிய நட்சத்திரங்களின் அளவிற்கு ஒளி வீசும் என்றும் கூறப்படுகிறது. இந்த வானியல் நிகழ்வு எதிர்வரும் டிசம்பர் 21ம் தேதி நடைபெறும் என வானியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments