Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒப்பந்தத்தை மீறி குண்டு மழை பொழியும் ரஷ்யா! – சிரியாவில் பதற்றம்!

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (08:05 IST)
சிரியாவில் கிளர்ச்சியாளர்களோடு பல ஆண்டுகளாக யுத்தம் நடந்து வரும் நிலையில் தற்போது அமைதி ஒப்பந்தம் அமலில் உள்ளது, இந்நிலையில் ரஷ்யா குண்டு மழை பொழிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக அதிபர் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே முடிவுறாத யுத்தம் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டு போரில் சிரிய அதிபருக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது. தொடர்ந்த யுத்தத்தால் பல சிரிய மக்கள் அகதிகளாக உலகம் முழுவதும் சிதறியுள்ளனர், பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் ஏற்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் படி உள்நாட்டு போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்ய விமானங்கள் கிளர்ச்சியாளர்களின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் பலர் இடம் பெயர்ந்துள்ளனர். இதில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments