Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிவுக்கு வருகிறது மனிதர்கள் மீதான கொரோனா! – ரஷ்ய விஞ்ஞானி கணிப்பு!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (09:58 IST)
உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா பாதிப்பு விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக ரஷ்ய விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் இருந்து வரும் நிலையில் கொரோனாவின் பல்வேறு திரிபுகளால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் புதிய வீரியமிக்க திரிபான ஒமிக்ரான் மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கொரொனா பரவல் குறித்து பேசியுள்ள ரஷ்ய தொற்றுநோயியல் நிபுணர் விலாடிஸ்லோம் ஸெம்சுகோவ் “மனிதர்கள் மீதான கொரோனா வைரஸின் தாக்கம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் இயற்கையில் தன்னை கொல்லாத வேறு உயிரினத்தை தேடி அதில் அடைக்கலம் புகும். மனித இனத்தில் ஒட்டுமொத்தமாக 70 முதல் 80 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது கொரோனாவால் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாது. எனவே தடுப்பூசி செலுத்துவதில் அனைத்து நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments