Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதின் பதவி விலகினாலும் கிங்காக இருப்பாரா? மீண்டும் வளைக்கப்படும் சட்டம்!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (17:06 IST)
ரஷ்ய அதிபர் புதினுக்காக மீண்டும் அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் மிகப்பெரிய திருத்தம் ஒன்று செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக இருந்து வருகிறார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஜனநாயகக் குரலை நெறிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் புடின் அதிபர் பதவியில் இருந்து அடுத்த ஆண்டு விலகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் பார்க்கின்சன் நோய் இருப்பதாகவும் அதனால் அவர் இப்போது அதிக அளவிலான வலியை எதிர்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக புதின் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லபப்டுகிறது.

இந்நிலையில் இப்போது ரஷ்யா அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாம், அதன்படி அதிபர் பதவியில் இருந்து பதவி விலகிய முன்னாள் அதிபர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது எந்த ஒரு வழக்கோ அல்லது அவர்களின் சொத்து பறிமுதலோ செய்யப்பட முடியாதாம். தேச துரோக வழக்குகளில் மட்டுமே வழக்குப் பதிவு செய்ய முடியும் என இந்த சட்ட மசோதா கூறுகிறதாம். இந்த திருத்தத்துக்கு நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துவிட்டதாக சொல்லப்படும் மேலளைவியிலும் ஒப்புதல் பெற்றால் புதின் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.

தனது ஓய்வுக்குப் பிறகு தனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதறகாகவே இந்த சட்டத்திருத்தத்தை புதின் கொண்டுவருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments