Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய தூதர் துருக்கியில் சுட்டு கொலை!!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2016 (11:26 IST)
துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோவை, துருக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
துருக்கி தலைநகர் அங்காராவில் நடந்த, புகைப்பட கண்காட்சியில் துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்டிரே கார்லோவ் கலந்து கொண்டார். அதில் அவர் பேச துவங்கிய போது, ஒருவர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத்துவங்கினார்.
 
இதில் ஆண்டிரே கார்லோ உடலின் பல இடங்களில் குண்டு பாய்ந்து பலியானார். இதை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிசெய்துள்ளது. 
 
இந்த தாக்குதலில், ஆண்டிரே கார்லோவை சுட்டுக்கொன்ற நபர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர தூதரை சுட்டு கொன்றவர், பணியில் இல்லாத துருக்கி போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜூன், ஜூலை தான் கோடை காலமா? படிப்படியாக வெப்பம் உயரும் என வானிலை எச்சரிக்கை..!

டெல்லியில் வீடுகளை இழந்த தமிழர்களின் வங்கிக்கணக்கில் பணம்.. தமிழக அரசு அனுப்பியது..!

திமுகவை இன்னும் 8 மாதங்களில் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம்: பாமக கூட்டத்தில் அன்புமணி பேச்சு

ஃபாஸ்டேக் ஆண்டு சந்தா அறிமுகம்.. ஒரு ஆண்டுக்கு எவ்வளவு? ஆண்டு சந்தா கட்டினாலும் சில நிபந்தனைகள்..!

நல்லவேளை உயிர் பிழைத்தேன்.. தேனிலவுக்கு முன் காதலனுடன் ஓடிப்போன மணப்பெண்ணின் கணவர் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments