Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகளை நிராகரித்த வடகொரியா: ரஷ்யா மீண்டும் ஆர்வம்

Webdunia
வியாழன், 8 ஜூலை 2021 (15:50 IST)
வடகொரியாவுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு ரஷ்யா மீண்டும் முன்வந்திருக்கிறது. 

 
வடகொரிய மக்கள் பசியால் வாடுவதாகவும், கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கு முன் பல நாடுகள் தடுப்பூசி வழங்க முன்வந்தபோது, தங்களுக்குத் தேவையில்லை என வடகொரியா நிராகரித்துவிட்டது.
 
அதற்குப் பதிலாக நாட்டின் எல்லைகளை அடைத்து விட்டது. அதனால் சீனாவில் இருந்து வர வேண்டிய இறக்குமதி தடைபட்டிருக்கிறது. உணவுப் பொருள்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.
 
நாட்டின் உணவு நெருக்கடி ஏற்பட்டிருப்பதை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அண்மையில் ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் வடகொரியாவுக்கு தடுப்பூசி வழங்கத் தயாராக இருப்பதா ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார்.
 
தங்களது நாட்டில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது. இருப்பினும் அண்மையில் ஒரு மோசமான சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

சட்டமன்றத்தில் நீட் தீர்மானம் கொண்டு வருவதால் என்ன பயன்.? அரசியல் நாடகம் என இபிஎஸ் விமர்சனம்..!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வாக்குறுதி என்ன ஆச்சு? தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி

நீட் விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments