Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்; 6 பேர் பலி

Sinoj
செவ்வாய், 23 ஜனவரி 2024 (17:23 IST)
உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் 2 வது பெரிய நகரமான கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து இன்று ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

உக்ரைன் மீது ரஷிய நாடு போர்தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் அளித்து வரும் நிதியுதவி மற்றும் ஆயுத உதவியால், உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இரண்டு ஆண்டுகளாக இரு நாடுகள் இடையே போர் தொடுத்து வரும் நிலையில்,  இரு தரப்பிலும் பல ஆயிரக்கணக்கான மக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்தப் போரினால் சர்வதேச பொருளாதாரத்திலும் கடும் பாதிப்புகள் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கிவ் மற்றும் 2 வது பெரிய நகரமான கார்கீவ் ஆகிய நகரங்களை குறிவைத்து இன்று ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இதில், கீவ் நகரில்  ஒரு நபரும், கார்கீவ் நகரில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகிறது. மேலும், கார்கீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்துள்ளதாகவும், இதில், இடிபாடுகளில் சிக்கி பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments