Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் பிரதமர் வெற்றி பெற்ற அடுத்த நாளே ராக்கெட் தாக்குதல்: பாலஸ்தீன சதி வேலையா?

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (19:17 IST)
இஸ்ரேல் நாட்டில் தேர்தல் முடிந்து பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே பாலஸ்தீன நாட்டில் இருந்து நான்கு ராக்கெட்டுகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இஸ்ரேல் நாட்டில் பிரதமர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போதைய பிரதமரான பெஞ்சமின் மீண்டும் பிரதமராகி உள்ளார். இந்த நிலையில் அவர் மீண்டும் பிரதமராக விரைவில் பதவி ஏற்க இருக்கும் நிலையில் அண்டை நாடான பாலஸ்தீன நாட்டில் இருந்து 4 ராக்கெட்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
 
 இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் பிரதமர் தேர்தல் முடிந்த அடுத்த நாளே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

தேர்தலில் யாருக்கு வெற்றி? சர்வே எடுக்கிறார்களா உளவுத்துறை அதிகாரிகள்?

கணவர் இறந்தவுடன் 2 நபர்களுடன் தொடர்பு.. பழிவாங்க குழந்தையை கடத்திய நபர்..!

’பாபநாசம்’ பட பாணியில் கணவரை கொலை செய்து புதைத்த மனைவி.. காட்டி கொடுத்த டைல்ஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments