Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜமைக்காவில் கொள்ளைக் கும்பல் துப்பாக்கிச்சூடு! திருநெல்வேலி இளைஞர் பலி!

Jamaica Gun Shot
Prasanth Karthick
வியாழன், 19 டிசம்பர் 2024 (10:24 IST)

ஜமைக்கா நாட்டில் கொள்ளைக் கும்பல் ஒன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் திருநெல்வேலியை சேர்ந்த இளைஞர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

வெஸ்ட் இண்டீஸ் தீவு நாடுகளின் ஒன்றான ஜமைக்கா நாட்டில் உள்ள ப்ராவிடன்ஸ் தீவில் தென்காசியை சேர்ந்த அரவிந்த் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். அங்கு திருநெல்வேலியை சேர்ந்த 4 பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

 

இந்நிலையில், ஜமைக்கா நேரப்படி செவ்வாய்க்கிழமை அன்று துப்பாக்கியுடன் சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் பணத்தை கொள்ளையடித்து விட்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் அங்கு பணியாற்றி வந்த விக்னேஷ் மீது குண்டு பாய்ந்ததில் அவர் பரிதாபமாக பலியானார். மேலும் 2 பேர் குண்டடி பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இறந்த விக்னேஷின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விக்னேஷின் உறவினர்கள் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

நான் முதல்வன் திட்டத்தில் படித்து UPSCல் முதல் ஆளாக வந்த மாணவர்! - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

நீட் தேர்வு பயிற்சி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை.. ஒரே பயிற்சி மையத்தில் இது 11வது சம்பவம்..!

சவுதி எல்லைக்குள் நுழைந்த மோடி விமானம்! சுற்றி வந்த அரேபிய போர் விமானங்கள்! - வைரலாகும் வீடியோ!

ஹார்ன் சவுண்டில் மிருதங்கம், புல்லாங்குழல் இசை..! மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments