Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயுத் தொல்லைக்கு முடிவு – விதவிதமான பிளேவரில் மாத்திரை !

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (15:23 IST)
வாயுத்தொல்லையால் அவதிப்படும் பலருக்கும் நிம்மதி அளிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் ஒரு புதிய மாத்திரையைக் கண்டு பிடித்துள்ளார்.

மோசமான உணவுப்பழக்க வழக்கத்தாலும், செரிமான மண்டலத்தாலும் பலருக்கும் வாய்த்தொல்லை உருவாகி வருகிறது. இதனால் பொது இடங்களில் தர்ம சங்கடமான சூழ்நிலைகளும் ஏற்படும். ஒரு விருந்திலோ, ஒரு அலுவலக கூட்டத்திலோ சுற்றி 100 பேர் இருக்கும் இடத்தில் ஒருவருக்கு இருக்கும் வாயுத்தொல்லையால் சுற்றி இருப்பவர் அனைவரும் அதிருப்தியடைஅய நேரலாம்.

இந்த பிரச்சனைகளைத் தீர்க்கவே பிரெஞ்ச் நாட்டு மருந்து நிறுவனம் மாத்திரைகளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மாத்திரைகளை உண்டால் வாயு வெளியேறும் போது வரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்துவதோடு மல்லிகைப் பூ மற்றும் சாக்லேட் பிளேவரில் நறுமனம் வருமாறும் இந்த மாத்திரைகள் மாற்றும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத்திரைகளில் வேதிப்பொருட்களோ அல்லது உடலுக்குக் கேடு விளைவிக்கும் பொருட்களோ இல்லை என இதனைக் கண்டுபிடித்த அறிஞரான கிறிஸ்டியன் போனய்ன்செவல் கூறியுள்ளார். 60 மாத்திரைகள் கொண்ட ஒரு பெட்டியின் விலை 1500 ரூபாய் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி.. காவல்துறை கைகள் கட்டப்பட்டு உள்ளது: அண்ணாமலை

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments