Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்ணீரில் மாத்திரையைக் கலந்து ஊசி மூலம் போதை – செஞ்சியில் கெட்டுத் திரியும் இளைஞர்கள் !

தண்ணீரில் மாத்திரையைக் கலந்து ஊசி மூலம் போதை – செஞ்சியில் கெட்டுத் திரியும் இளைஞர்கள் !
, செவ்வாய், 11 ஜூன் 2019 (13:15 IST)
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மெடிக்கல் ஷாப்புகளில் அனுமதி மறுக்கப்பட்ட போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மலைகளையும் காடுகளையும் கோட்டைகளையும் கொண்ட இயற்கை அழகுக்குப் பெயர் போன ஊர். ஆனால் இந்த இயற்கை அழகுகளை அங்குள்ள இளைஞர்கள் தவறானக் காரியத்துக்குப் பயன்படுத்திகொள்ள ஆரம்பித்துள்ளனர்.

மருந்துக் கடைகளில் கிடைக்கும் அதிக வலிமை கொண்ட வலி நிவாரணிகளை வாங்கி மலைகளுக்குள் சென்று அதைத் தண்ணீரில் கலந்து ஊசி மூலம் ஏற்றி போதை ஏற்றிக் கொள்கின்றனர். அந்தப் பகுதியில் மருந்து சீட்டுகள் இல்லாமல் இப்படியான மருந்துகளை மருந்து கடைகளும் ஏகபோகமாக விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட ஸ்டைலில் மீன்களுக்கு தளபதியை உணவாக கொடுத்த கொரிய அதிபர்