Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு அரிய வகை நோய் தொற்று- உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
சனி, 16 மே 2020 (15:18 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அதனோடு அரியவகை நோய் தொற்று ஒன்றும் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 44 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு 3 லட்சத்துக்கும் மேல் பலியாகியுள்ளனர். இந்த நோய்க்கு இதுவரையும் தடுப்பு மருந்து எதுவும் இல்லாததால் உலக நாடுகள் அனைத்தும் தடுமாறி வருகின்றனர். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது.

ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தொழில் நுட்பத் தலைவர் மரியா வான் கெர்க்கோவா, ‘இங்கிலாந்தில் கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு வேறு சில அரிய வகை தொற்று நோயும் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் பாதிப்பை கணிப்பது சற்று சிரமமாக உள்ளதாகவும், இந்த நோய் தொற்றை புரிந்துகொள்ள நாங்கள் முயன்று வருகிறோம். மேலும் இந்த தொற்று கொரோனா பாதிக்காத குழந்தைகளிடமும் உள்ளது’ எனக் கூறியுள்ளார். இதனால் உலக மக்கள் இடையே மேலும் பீதி அதிகமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments