Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடியோ ரீல்ஸ் செய்ததால் ஆத்திரம்! தங்கையை சுட்டுக் கொன்ற அண்ணன்!

Webdunia
செவ்வாய், 2 ஜனவரி 2024 (09:58 IST)
டிக்டாக்கில் தொடர்ந்து வீடியோ ரீல்ஸ் செய்து வந்த தங்கையை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும்போதே அண்ணன் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் வீடியோ ரீல்ஸ் தளங்களில் முக்கியமானது டிக்டாக் என்னும் சீன செயலி. இந்த டிக்டாக்கிற்கு இளைஞர்கள் பலர் அடிமையாவதால் ரீல்ஸ் மோகத்தில் ஆபத்தான செயல்களை செய்வதாகவும், அதை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கைகள் இருந்து வருகின்றன. இந்தியாவில் இந்த செயலி முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் டிக்டாக் செயலி தடை செய்யப்படுவதும், சில காலத்திற்கு பின் தடை நீக்கப்படுவதுமாக இருந்து வருகிறது. பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் குஜராத் மாவட்டத்தை சேர்ந்த பதின்வயது இளம்பெண் ஒருவர் அடிக்கடி டிக்டாக்கில் ரீல்ஸ் வீடியோ செய்து வந்துள்ளார். இவ்வாறு ரீல்ஸ் செய்யக்கூடாது என அந்த பெண்ணின் சகோதரன் எச்சரித்தும், அதை கண்டுகொள்ளாமல் இளம்பெண் டிக்டாக் வீடியோ செய்து வந்ததால் ஆத்திரமடைந்த அண்ணன் தனது தங்கையை சுட்டுள்ளார். இதில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான அண்ணனை தேடி வருகின்றனர். டிக்டாக் மோகத்தால் ஒரு உயிர் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments