Publish Date: Fri, 08 Sep 2017 (13:27 IST)
Updated Date: Fri, 08 Sep 2017 (13:33 IST)
ஜப்பானில் 7 வயது சிறுமிகள் கடன் தொல்லை காரணமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட துயர சம்பவங்கள் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேறியுள்ளது.
குடும்ப கூழல்நிலை காரணமாக 7 வயதை தாண்டிய சிறுமிகள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட துயரம் நடந்துள்ளது. இடோ என்று அழைக்கப்பட்ட ஐப்பானின் தலைநகர் டோக்கியோவில் இந்த துயரங்கள் அதிக அளவில் நடந்துள்ளது.
இங்கு அதிகாரப்பூர்வமாண சிவப்பு விளக்கு பகுதி உருவாக்கப்பட்டு நூற்றுக்கணக்காண விபச்சார விடுதிகளும் அமைக்கப்பட்டிருந்துள்ளது. மேலும், ஆண்களை வசீகரிக்க சாலையில் ஒரு கூண்டுக்குள் பெண்கள் அடைப்படுவார்களாம்.
சில சமயம் பெண்களை சில செல்வந்தர்கள் ஏலம் எடுத்தும் அழைத்து சென்றுள்ளனர். இந்த பகுதிக்கு வரும் சிறுமிகள் வாழ்நாள் முழுவதும் அங்குதான் இருக்க வேண்டி இருந்தது.