Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினை: ஐடியா மணியாக களம் இறங்கிய ட்ரம்ப்!

Webdunia
புதன், 29 ஜனவரி 2020 (11:25 IST)
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டு காலமாக தொடர்ந்து வரும் யுத்தத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக தங்கள் சொந்த நாட்டுக்கான போர் நடந்து வருகிறது. முக்கியமாக யூதர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் பொது புனித தலமாக விளங்கும் ஜெருசலேம் மீது இரு தரப்பிலும் ஆதிக்கம் செலுத்த பெரும் யுத்தம் நடந்து வருகிறது. ஜெருசலேம் யாருக்கு என்பதே போரின் மையமாக உள்ளது.

இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு முடிவுக்கட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார். அதன்படி இஸ்ரேல் தங்களது குடியேற்றத்தை நான்கு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் அதிபர் ட்ரம்பின் இந்த திட்டம் இஸ்ரேலியர்களுக்கு நன்மையளிப்பதாக உள்ளதாக பாலஸ்தீனம் கருத்து தெரிவித்துள்ளது. ட்ரம்பின் கருத்துக்கு பாலஸ்தீன ஆதரவு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments