Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2023 (15:18 IST)
பப்புவா  நியூ கினியா  நாட்டில் 7.2 அளவிலான சக்திவாய்ந்த   நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், துருக்கி மற்றும் சீனா ஆகியா நாடுகளில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில், அந்த நாடுகளிலுள்ள கட்டிடங்கள் இடிந்து பெரும் விபத்து ஏற்பட்டு, பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் உலக நாடுகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், சீனா, தைவான், இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நில நடுக்கம் அவ்வப்போது உணரப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,'பப்புவா நியூ கினியா என்ற நாட்டில் 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கடலோர நகரமான வெவாக்கிலிருந்து சுமார் 97 கிமீ தூரத்தில் 62 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை' என்று  அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவினர் ட்ரெண்ட் ஆவதற்காக இப்படி செய்கிறார்கள்!? - வியாசர்பாடி சம்பவம் குறித்து காவல்துறை விளக்கம்!

சென்னை கேளிக்கை பூங்கா ராட்சத ராட்டினத்தில் கோளாறு.. 3 மணி நேரம் அந்தரத்தில் 30 பேர்..!

வங்கக்கடலில் வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி! தமிழகத்தில் இன்று ஆரஞ்சு அலெர்ட்!

பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள்.. விளக்கம் கேட்டு ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்..!

அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா மாறினால் ஒரு பைசா செலவில்லை.. டிரம்ப் கூறிய ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments