அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு கலிபொர்னியாவில் உள்ள சாண்டியாகோ நகரில் ரிக்டர் அளவில் 5.2 ஆக காலை 10.08 மணிக்கு பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இது சுமார் 193 கி.மீ தொலைவிற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி வரை உணரப்பட்டதால் மக்கள் பீதியில் வீடுகலை விட்டு வெளியேறினர். சில பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட நிலையில் இன்று அமெரிக்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K