Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய-அமெரிக்க உறவில் விரிசல்: ஐ.நா. கூட்டத்தை புறக்கணிக்கும் பிரதமர் மோடி!

Mahendran
சனி, 6 செப்டம்பர் 2025 (12:27 IST)
பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் அவையின் பொது அமர்வில் பங்கேற்க போவதில்லை என்றும், அவருக்கு பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த மாத இறுதியில் ஐ.நா. பொதுக் கூட்டத்தின் 80வது அமர்வு நடைபெற உள்ளது. பொதுவாக, இந்த அமர்வில் உலகத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
 
இந்த நிலையில் இந்தியா-அமெரிக்கா இடையே நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தையில் உள்ள சிக்கல்களால் இரு நாடுகளின் உறவில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பயணத்தை ரத்து செய்த நிலையில், இப்போது பிரதமர் மோடியும் அமெரிக்க பயணத்தை ரத்து செய்துள்ளார்.
 
பிரதமர் மோடிக்குப் பதிலாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ஐ.நா. பொதுக் கூட்டத்தில் இந்தியா சார்பில் உரையாற்றுவார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2025-ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: கூகுளில் சியர்ச் செய்தால் கிடைக்கும் ஆச்சரியம்..!

20 நாட்களாக காணாமல் போன மாணவி பிணமாக மீட்பு.. ஆசிரியரே கொலை செய்தாரா?

மாணவியின் தலையில் அடித்த ஆசிரியை.. மண்டை ஓட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அதிர்ச்சி..!

EVM மிஷினில் கலரில் வேட்பாளர்களின் புகைப்படங்கள்.. தேர்தல் ஆணையத்தின் புதிய முயற்சி..!

கர்ஜனை கனிமொழி .. சிம்மசொப்பனமாக செந்தில் பாலாஜி.. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments