Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப்ளேபாய் மாடல் ஆண் நண்பரின் வீட்டில் மர்ம மரணம்

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (13:14 IST)
முன்னாள் ப்ளேபாய் மாடல் கிறிஸ்டினா கார்லின்-க்ராஃப்ட் அவரது வீட்டின் படுக்கையறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
 
அவரது ஆண் நண்பரே இவ்வீட்டுக்கு சொந்தக்காரர். அவருடன் கிறிஸ்டினா ஒன்பது வருடங்கள் டேட்டிங்கில் வாழ்ந்துவந்ததாக  உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்ததாக அவர் போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார். திருடுபோன பொருள்களை போலீசார் கண்டுபிடித்து, அதை அவரிடம் கொடுக்க சென்றபோதுதான் போலீசார் கிறிஸ்டினாவின் உடலை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துளளது. 
 
கொள்ளை நடந்த தினம் மற்றும் அதற்கு முன் இரண்டு நாட்களும் ஒரு சந்தேக ஆண் நபர் அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்ததை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. 
 
இதனை வைத்துக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு போலீஸார் முன்நோக்கி செல்வதாகவும், விரைவில் இந்த கொலை குறித்த பின்னணி உண்மைக்கள் கண்டுபிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments