Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்ணை உண்ட பன்றிகள்: ரஷ்யாவில் பரிதாபம்

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (17:46 IST)
தங்களின் இருப்பிடத்தில் தவறுதலாக விழுந்துவிட்ட ஒரு 56 வயதான பெண்ணை பன்றிகள் சாப்பிட்டு விட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
உட்மர்ட்டியா என்ற மத்திய ரஷ்யப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் விலங்குகளுக்கு உணவளிக்க தனது வீட்டை விட்டு வெளியே வந்த விவசாயியான அப்பெண்ணுக்கு, வலிப்பு நோய் வந்திருக்கலாம் அல்லது அவர் மயக்கமடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
 
இறந்த பெண்ணின் உடலை அவரது கணவர் பின்னர் கண்டறிந்துள்ளார். அதிக அளவிலான ரத்த இழப்பினால் அவர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. 
 
இப்பெண்ணின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாளில் வெகு முன்னதாகவே உறங்கியுள்ளார்.
 
பின்னர் காலையில் விழித்த அவர் தனது மனைவியை வீட்டில் காணவில்லை என்பதால் தேடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்றும் அனுமதி இல்லை: வனத்துறை முடிவால் பக்தர்கள் அதிருப்தி..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு: இன்றும் நாளையும் மழை பெய்யும் மாவட்டங்கள் எவை எவை?

அறிவாலயத்தின் வாசலில் எம்பி சீட்டுக்காக நிற்பவர் ப சிதம்பரம்: தமிழிசை செளந்திரராஜன்

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற கோரிக்கையா? சட்ட அமைச்சர் விளக்கம்..!

வக்பு சட்டத்திருத்தம்: அம்பானியின் ரூ.15,000 கோடி வீட்டுக்கு ஆபத்தா?

அடுத்த கட்டுரையில்
Show comments