Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரிமலைக்குள் விழுந்த நபர் உயிருடன் மீட்பு: தப்பித்தது எப்படி?

Webdunia
சனி, 4 மே 2019 (11:38 IST)
எரிமலையை பார்வையிட சென்ற போது அதற்குள் தவறி விழுந்த நபர் ஒருவரை போலீஸார் உயிருடன் மீட்டுள்ளனர். 
 
ஹவாய் எரிமலை தேசிய பூங்காவில் கீல்வேய கல்டெரா என்ற எரிமலையை பார்வையிட்ட போது ஒருவர் தவறி அதனுள் விழுந்துள்ளார். இதை கண்ட மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
39 வயதான அந்த நபர் அங்கு சென்றபோது, அவர் நடந்த பாதை சிதைந்து, 300 அடி உயரமான அந்த எரிமலையில் விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விவரிக்கின்றனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் ஹவாயில் உள்ள மிகவும் தீவிர எரிமலையின் 70 அடி ஆழத்தில் விழுந்த அந்த நபரை பலத்த காயங்களுடன் மீட்டுள்ளனர். 
 
அந்த நபர் தீப்பிழம்பில் விழாமல், அங்கிருந்த தொங்கு பாறை ஒன்றில் விழுந்ததால் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments