Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாமாயில் ஏற்றுமதிக்கு தடை; விலை உயரும் அபாயம்! – இல்லத்தரசிகள் கவலை!

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (13:28 IST)
ஏற்கனவே உலகம் முழுவதும் சமையல் எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில் பாமாயில் ஏற்றுமதிக்கு இந்தோனேசியா தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் பாமாயில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாமாயில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தோனேசியா முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தோனேஷியாவில் உற்பத்தி செய்யப்படும் பாமாயிலில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்நாட்டு பயன்பாட்டிற்கு விற்கப்படுகிறது.

மீத இரண்டு பங்கு அளவு பாமாயில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சமீப காலமாக இந்தோனேஷியாவிலேயே பாமாயிலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பாமாயில் வெளிநாட்டு ஏற்றுமதியை இந்தோனேசிய அரசு தடை செய்துள்ளது. இதனால் மற்ற நாடுகளில் பாமாயில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே உக்ரைன் போரால் சூரியகாந்தி எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் பாமாயில் எண்ணெய் விலையும் அதிகரிக்கலாம் என மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments