Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்ககிட்டயும் அணு ஆயுதம் இருக்கு! – பாகிஸ்தான் அணு ஏவுகணை சோதனை

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (09:15 IST)
பாகிஸ்தான் அரசு தரையிலிருந்து புறப்பட்டு சென்று தாக்கும் காஸ்னவி ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.

உலக நாடுகள் தங்கள் ஆயுத பலத்தை சோதிப்பதற்காகவும், தங்கள் ஆயுத பலத்தை மற்ற நாடுகளுக்கு நிரூபிக்கவும் அடிக்கடி ஏவுகணை சோதனை போன்றவற்றில் ஈடுபடுகின்றன. சமீப காலமாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளில் ஈடுபடுவதை அமெரிக்கா கண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தன்னிடம் உள்ள காஸ்னவி என்ற ஏவுகணையை சோதனை செய்துள்ளது. தரையிலிருந்து புறப்பட்டு தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெற்ற இந்த ஏவுகணை அணு குண்டுகளை தாங்கி சென்று தாக்கும் திறன் பெற்றவை. இந்த காஸ்னவி ஏவுகணை சோதனையை ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்திய பாகிஸ்தான் மீண்டும் நேற்று சோதனை செய்துள்ளது. அந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

சமீப காலமாக இந்தியா தனது அதிநவீன ஏவுகணைகளை சோதித்து பார்த்து வரும் நிலையில் பாகிஸ்தான் இந்த சோதனையில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக கூட்டணியில் தேமுதிக இணைகிறதா? அமைச்சர் கே.என்.நேரு தகவல்..!

நாட்டில் நல்லது நடக்க வேண்டும் என்று சிந்திக்க கூடியவர் ஆடிட்டர் குருமூர்த்தி: நயினார் நாகேந்திரன்

2026 தேர்தல் திமுக vs தவெக தான்.. அதிமுக ஒரு மேட்டரே இல்லை.. பத்திரிகையாளர் மணி..!

3 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை.. குற்றவாளியை என்கவுண்டர் செய்த போலீஸ்..!

ரெப்போ வட்டி விகிதம் 0.5% குறைப்பு.. லோன் வாங்கியவர்களுக்கு கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments