Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு: திருநெல்வேலி, தூத்துக்குடியில் தொடக்கம்

Webdunia
வெள்ளி, 24 ஜனவரி 2020 (08:59 IST)
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்கள் வாங்கி கொள்வதற்கான திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு கணினி மயமாக்கப்பட்டன. மேலும் அவற்றுடன் ஆதார் எண்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் ரேசனில் பொருட்கள் வாங்கியதும் அதன் விவரங்கள், விலைப்பட்டியல், பொருள் இருப்பு ஆகியவை குறுஞ்செய்தி மூலம் செல்போன் எண்களுக்கு வந்துவிடும். இந்நிலையில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்களை வாங்கி கொள்ளும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இதன் முதற்கட்டமாக தற்போது தூத்துக்குடி மற்றும் திருநெல்வெலியில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்கள் ரேசன் கார்டுகளை கொண்டு மாவட்டம் முழுதும் உள்ள எந்த ரேசன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம். பரிச்சார்ந்த முயற்சியாக தொடங்கப்பட்ட உள்ள இதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு முழுமையாக மாநிலம் முழுவதும் செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments