Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

Siva
ஞாயிறு, 18 மே 2025 (15:19 IST)
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளிக்கவும், பாகிஸ்தான் தொடர்ந்து தீவிரவாதத்திற்கு ஆதரவளித்து வருவது குறித்து கூறவும், உலக நாடுகளுக்கு இந்தியாவின் எம்பிக்கள் பயணம் செய்ய உள்ளனர். இதில், தமிழக எம்பி கனிமொழி உள்பட பலர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் தனது தூது குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தலைமையில் ஒரு குழுவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் அமைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்த தகவலை, பிலாவல் பூட்டோ தனது எக்ஸ் பதிவில் உறுதி செய்துள்ளார். "பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் என்னை அழைத்து, சர்வதேச அரங்கில் அமைதிக்கான முயற்சிகள் நிலைநாட்ட கேட்டுக் கொண்டார்" என்றும், "இந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments