Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராஹிம் எங்க நாட்டுல இல்லைங்கோ! – பல்டி அடித்த பாகிஸ்தான்!

Webdunia
திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (08:54 IST)
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியுள்ளதாக வெளியான செய்தியை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு துணை போவதாக பாகிஸ்தானை கறுப்பு பட்டியலில் சேர்த்த எஃப்.ஏ.டி.எஃப் நிதி அமைப்பு நிரந்தரமாக நிதி உதவி அளிக்க தடை விதிக்கும் அபாயம் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அதை தொடர்ந்து ஐ.நாவால் பயங்கரவாதிகள் என பட்டியலிடப்பட்ட நபர்களில் 88 நபர்கள் மற்றும் அமைப்புகளை பாகிஸ்தான் தடை செய்வதாக அறிவித்துள்ளது. அந்த 88 பேரில் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பெயரும் இடம்பெற்றுள்ளது.

பல ஆண்டுகளாக தாவூத் இப்ராஹிமை இந்தியா தேடி வரும் நிலையில் பாகிஸ்தானின் பட்டியலில் தாவூத் பெயர் இடம் பெற்றுள்ளதால் அவர் பாகிஸ்தானில் இருப்பதாக சந்தேகம் எழ தொடங்கியது. இந்நிலையில் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இல்லையென்றும், ஐநா பட்டியலில் உள்ள பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை தவறாக பலர் புரிந்து கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

வீட்டுக்கடன் மோசடி.. விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு!

பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்! அரசின் திட்டத்தை தனியாளாக தொடங்கிய பிரபல யூட்யூபர்!

அடுத்த கட்டுரையில்
Show comments