Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முடிவாகும் இம்ரான் கான் தலையெழுத்து!

Webdunia
சனி, 9 ஏப்ரல் 2022 (09:03 IST)
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. 

 
பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராக ஆட்சி செய்து வரும் நிலையில் சமீப காலமாக பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடிகளால் இம்ரான்கான் ஆட்சி ஸ்திரத்தன்மை இழந்துள்ளது. இந்நிலையில் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதை சபாநாயகர் நிராகரித்தார். அதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் ஆட்சியை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்துவதாக அறிவித்தார்.
 
ஆனால் எதிர்கட்சிகள் இதை எதிர்த்து பாகிஸ்தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இம்ரான்கான் ஆட்சியை கலைத்தது செல்லாது என அறிவித்துள்ளது. இதனால் மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாக இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
 
அதன்படி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த வாக்கெடுப்பு முடிந்தவுடன் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவார் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்.. சென்னை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

LLB சட்டப்படிப்புக்கு விண்ணப்பம்.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

இந்துக்களிடம் ராகுல் காந்தி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: இந்து முன்னணி

ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக உயர்வு..எங்கு பார்த்தாலும் மரண ஓலம்..!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள்.. ஆணையத்தின் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments