Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.990 கோடி புதிய வரி விதிக்க முடிவு: அரசின் முடிவால் அதிர்ச்சியில் பொதுமக்கள்!

pakistan
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (19:59 IST)
புதிதாக 990 கோடி ரூபாய்க்கு வரி விதிக்க அரசு முடிவு செய்ததை அடுத்து பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது இந்தியாவில் அல்ல என்பதும் பாகிஸ்தானில் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தானுக்கு சொந்தமான சில இடங்களை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் பாகிஸ்தானின் நிதி நெருக்கடி நிலையை சமாளிக்க 3,000 கோடி ரூபாய் தேவைப்படுவதால் சுமார் 990 கோடி ரூபாய் வரி மூலம் நிதி திரட்ட முடிவு செய்திருப்பதாக அந்நாட்டின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது 
 
இது நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புதிய வரி குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வரும் என்று கூறப்படுவதால் பாகிஸ்தான் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நேருவை விட அம்பேத்கார் தான் சிறந்த பிராமணர்: சுப்பிரமணியன் சுவாமி