Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ராணுவம்..

Arun Prasath
வெள்ளி, 8 நவம்பர் 2019 (12:56 IST)
பாகிஸ்தான் பிரதமர், கர்தார்பூருக்கு வரும் இந்திய சீக்கியர்களுக்கு பாஸ்போர்ட் தேவையில்லை என கூறிய நிலையில் அந்நாட்டின் ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் கர்தார்பூரில் தனது கடைசி வாழ்நாளை கழித்தார். இதனை தொடர்ந்து அவரது நினைவாக கர்தார்பூர் சாகிப் குருத்வாரா அமைக்கப்பட்டது. இந்த குருத்வாராவுக்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சீக்கியர்கள் சென்று வழிபட வழித்தடம் அமைக்கப்பட வேண்டும் என கோரி வந்தனர்.

இந்த கோரிக்கையை தொடர்ந்து பாகிஸ்தானின் கர்தார்பூர் சாகிப் குருத்வாராவையும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் புதிய வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீக்கியர்கள் விசா இன்றி சென்று வர வழிவகுக்கிறது.

குருநானக்கின் 550 ஆவது பிறந்தநாளையொட்டி வருகிற சனிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், இந்திய பிரதமர் மோடியும் திறந்துவைத்தனர். இதற்கு கட்டணமாக சீக்கியர்கள் ரூ.1400 செலுத்த வேண்டும்.
இந்நிலையில் சமீபத்தில் இம்ரான் கான் சீக்கியர்களுக்கு கர்தார்பூர் வர பாஸ்போர்ட் தேவையில்லை என அறிவித்தார். மேலும் அடையாள அட்டைகளே போதுமானது என கூறினார். இதனை தொடர்ந்து இம்ரான் கானின் இந்த முடிவிற்கு பாகிஸ்தான் ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கர்தார்பூருக்கு செல்லும் முதல் இந்திய குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments