Publish Date: Tue, 20 Dec 2016 (16:07 IST)
Updated Date: Tue, 20 Dec 2016 (16:09 IST)
பாகிஸ்தானில் ரூ.5000 நோட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்தியாவில் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்நாட்டின் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி, செனட் சபையில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தது. இதில் வழக்கத்தில் உள்ள ரூ.5000 நோட்டை திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது.
இதற்கு ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிக்கே பெரும்பான்மை நிலவி வருகிறது.
நாட்டில் சட்டவிரோத நடவடிக்கைகள் ரூ.5000 நோட்டுக்கள் மூலமாக நடைபெறுவதாக குற்றம்சாட்டி ரூபாய் நோட்டுக்கான தடை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.