Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா இரண்டாவது அலை ஆபத்து நாடுகள்! – பட்டியல் வெளியீடு!

Webdunia
வெள்ளி, 26 ஜூன் 2020 (08:07 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்கியுள்ள நிலையில் பல நாடுகளில் இரண்டாவது அலையாக கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் பரவ் தொடங்கிய கொரோனாவால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை கோடியை நெருங்கி வருகிறது. இந்நிலையில் பல நாடுகளில் கொரோனா குறைந்ததால் ஊரடங்கு நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் புள்ளி விவரங்களை அடிப்படையாக கொண்டு கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த நாடுகளின் பட்டியலில் ஏற்கனவே கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா, ஈரான், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் உள்ளது.

இதுதவிர உக்ரைன், வங்காளதேசம், ஸ்வீடன், பிரான்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இரண்டாம் அலை பாதிப்பிற்கு வாய்ப்புள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments