Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின் லேடனின் மகன் இறந்துவிட்டாரா?: அமெரிக்கா தகவல்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (10:20 IST)
ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின் லேடன் இறந்துவிட்டதாக அமெரிக்கா கூறியிருப்பது உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன். செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவின் கழுகு கண்கள் பின் லேடனை வட்டமடிக்க தொடங்கின. 10 வருட தொடர் தேடுதல் வேட்டைக்கு பிறகு 2011ல் பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின் லேடன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆனாலும் அல் கொய்தா அமைப்பு மற்ற தலைவர்களை கொண்டு மறைமுகமாக செயல்பட்டு கொண்டிருந்தது. அதில் முக்கியமான ஒருவர் ஒசாமா பின் லேடனின் மகன் ஹம்சா பின் லேடன். மத்திய கிழக்கு நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தார் ஹம்சா.

ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆன பிறகு ஹம்சாவின் பதுங்குதளம் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு தொகை வழங்கப்படுமென அமெரிக்கா அறிவித்தது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட அதிரடி தாக்குதல்களில் சிக்கி ஹம்சா உயிரிழந்திருக்க அதிகம் வாய்ப்பிருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments