Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேசும் குரங்குகள் : கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

பேசும் குரங்குகள் : கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
, வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (16:26 IST)
பேசும் குரங்குகளை இண்டியானா நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


 

 
பொதுவாக குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் என்று கூறப்படுகிறது. மனிதனின் அனைத்து பாகங்களும் குரங்களை ஒத்துள்ளதை நம்மால் காண முடிகிறது. பரிணாம வளர்ச்சியின் காரணமாகவே மனிதன் பிறந்தான் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
 
மனிதர்கள் போல் எல்லா செயலையும் செய்யும் குரங்குகளால், மனிதர்களைப் போலவே பேச முடியுமா என்று அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.அதில் உரங்குட்டான் குரங்குகளால் மனிதர்களைப் போல் பேச முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இண்டியானா நாட்டின் இண்டியானபோலீஸ் வனவிலங்கு பூங்காவில் உள்ள ராக்கி என்ற உரங்குட்டான் குரங்கு, உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து ஆகியவற்றை மனிதர்கள் போலவே உச்சரித்ததை விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். பழங்காலத்தில் நம்முடைய மூதாதையர்கள் இப்படி ஒலியெழுப்பியே பேச பழகியிருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கெஜ்ரிவால் ஊரில் இல்லை: ஆம் ஆத்மி கட்சியினர் பஞ்சாப் வேட்பாளர்களை அறிவித்து அதிரடி