Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் டாப் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ’ஒரே இந்தியர் ’

Webdunia
புதன், 6 மார்ச் 2019 (18:38 IST)
ஆண்டுதோறும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.ஆனால் ஏழைகளின் பொருளாதார வாழ்க்கையோ  நாளுக்கு நாள் விலைவாசி உயர்வால் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் 2019 ஆம் ஆண்டிற்கான உலகில் மிகப்பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ஃப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது.
 
இதில் முதலிடத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப்ப் பீஸோஸ் உள்ளார். அவரது சொத்து மதிப்பு 131 பில்லியம் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 9 லட்சம் கோடி ருபாய் ஆகும். இதில் சரிபாதியை தான் விவாகரத்து செய்துள்ள தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இரண்டாவதாக பிலேட்ஸ் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 6 லட்சம் கோடி ஆகும்.மூன்றாவது இடத்தில் வரன் பஃப்பெட் உள்ளார்.   எட்டாவது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் இருக்கிறார்.
 
இப்பட்டியலில் உலகில் முதல் 20 கோடிஸ்வரர்களில் 13 வது இடத்தில் உள்ளார் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 2.8லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
 
உலகின் முதல் 20 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர் ஒருவர் இடம் பிடிப்பது இதுவே முதன்முறை ஆகும்.இந்த சாதனைக்காக முகேஷ் அம்பானிக்கு பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments