Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 வயது சிறுவனை தவிக்கவிட்டு போதையில் தறிகெட்ட பெற்றோர்

4 வயது சிறுவனை தவிக்கவிட்டு போதையில் தறிகெட்ட பெற்றோர்
, சனி, 10 செப்டம்பர் 2016 (12:26 IST)
ஓஹியோ நகரில் கிழக்கு லிவர்பூல் என்னும் இடத்தில் அதிக அளவில் ஹெராயினை உட்கொண்டு போதையில் வாகனத்தில் தனது நான்கு வயது மகனை தனியே தவிக்கவிட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
போலீஸ் அதிகாரி, சாலையில் வாகன தாறுமாறாக சென்றதால் அதனை நிறுத்தி விசாரித்தார். அப்போது அவர் மனைவி மயக்கத்தில் இருக்கிறார், மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கூறிக்கொண்டே அவரும் போதையில் மயங்கினார். காரில் இருந்த சிறுவனை போலீஸார் மீட்டனர்.
 
ஓஹியோ காவல் துறை அதிக்காரி ஒருவர் இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் ” நான் இதன் மூலம் இந்த பயங்கரமான போதை மருந்தின் மற்ற பக்கத்தில் காட்ட நினைக்கிறேன். போதையின் தாக்கத்தில் பெற்றோர் மகனை தனியே காரில் விட்ட புகைப்படங்களை பகிர்வதன் மூலம் ஹெராயின் மற்றும் பெயின்கில்லர் தொற்றுநோய் தாக்கம் நாட்டில் எந்நிலையில் உள்ளது என்பதை காட்ட முயற்சிக்கிறேன்” என கூறிப்பிட்டு இருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த அப்பல்லோ மருத்துவர் கைது