Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாய் குரைப்பது போல் டிரம்ப் குரைக்கிறார். வடகொரிய அமைச்சரின் திமிர் பேச்சு

Advertiesment
north korea
, வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (05:45 IST)
வடகொரியா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தால் அந்நாட்டை உருத்தெரியாமல் அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது குறித்து கருத்து கூறிய வடகொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிரம்ப் மிரட்டியது நாய் குரைப்பதை போல இருக்கிறது என கூறியுள்ளார்



 
 
சமீபத்தில் ஐ.நா. பொதுசபையில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வடகொரியா அணுஆயுத சோதனைகளை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்நாட்டை முழுமையாக அழிக்க நேரிடும் என எச்சரித்தார். அதுமட்டுமின்றி வடகொரிய அதிபர் கிம் ஜாங் அவர்களை ராக்கெட் மனிதர் என்றும் குறிப்பிட்டார்.
 
டிரம்பின் இந்த எச்சரிக்கைகள் குறித்து பதிலடி கொடுத்த வடகொரிய வெளியுறவுத்துறை மந்திரி ரி யோங் ஹோ, 'நாய் குரைப்பதை போல் எங்களை சத்தமிட்டு மிரட்டலாம் என டிரம்ப் நினைப்பது நாயின் கனவு போன்றது என்றும், நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பதிலளிக்கும் போது  கூறினார். இன்று அவர் ஐ.நா. பொது சபையில் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாவூத் இப்ராஹிம் எங்கே? கைதான தம்பியிடம் போலீஸார் விசாரணை