Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடைகளை மீறி வருமானம்: வடகொரியாவில் நடப்பது என்ன?

Webdunia
சனி, 3 பிப்ரவரி 2018 (15:21 IST)
வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகள் உலக நாடுகளை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் கடும் கோபத்திற்கு உள்ளது. இதனால் பல பொருளாதார தடைகள் வடகொரியா மீது விதிக்கப்பட்டது.
 
இருப்பினும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத பரிசோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது. இந்நிலையில், வடகொரியா தன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை மீறியுள்ளதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது.
 
இது குறித்து ஐநா கூறியதாவது, வடகொரியா அதன் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மீறியுள்ளதாகவும், கடந்த வருடம் போலியான பாதைகள் மற்றும் தந்திரங்களை பயன்படுத்தி சுமார் 200 மில்லியன் டாலர்களை ஏற்றுமதியில் வருவாயாக ஈட்டியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளது. 
 
வடகொரியா மீது ஐநா 8 முறை பொருளாதார தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வடகொரியா தனது வருமானத்தை எவ்வாறு ஈடுசெய்து வருகிறது என்பதனை கண்காணிக்க ஐநா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments