Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடகொரியா மற்றும் சிரிய அதிபர் சந்திப்பு: அமெரிக்காவிற்கு எதிராக சதியா?

Webdunia
செவ்வாய், 5 ஜூன் 2018 (15:56 IST)
வருகின்ற 12 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். தற்போது புதிதாக வடகொரியா மற்றும் சிரிய அதிபர் சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தங்கள் நாட்டுக்கு வருகை தர  இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதனை அந்நாட்டு அரசு ஊடங்களும் உறுதி செய்துள்ளன. 
 
அதேபோல், சிரிய அதிபரும் நான் வடகொரியாவுக்கு செல்ல இருக்கிறேன். அந்நாட்டு அதிபர் கிம்முடன் எனது சந்திப்பு நடைபெறுகிறது என அறிவித்துள்ளார். 
 
இதற்கு முன்னர் சிரிய உள்நாட்டுப் போரில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதற்கு வடகொரியா உதவியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
 
இந்நிலையில் இவர்களது சந்திப்பு இதை உறுதிப்படுத்தும் விதமாகவும், சிரியாவை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு அமெரிக்காவிற்கு எதிரான ஒன்றாக கருதப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments