Publish Date: Fri, 25 Sep 2020 (11:47 IST)
Updated Date: Fri, 25 Sep 2020 (11:58 IST)
ஆண்டுதோறும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சாதிப்பவர்களுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும் மருத்துவம், வேதியியல், கலாசாரம், அமைதி மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் உச்சபட்ச சாதனைகளை செய்தவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இதற்கான பரிசுத்தொகையும் அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் இருந்து அந்த தொகை 1.1 மில்லியன் அமெரிக்கன் டாலராக உயர்த்த படுவதாக நோபல் பவுண்டேஷன் அறிவித்துள்ளது. இந்த பரிசுத்தொகையின் மதிப்பு இந்திய ரூபாயில் 8 கோடி ரூபாய் ஆகும்.