Publish Date: Tue, 06 Oct 2020 (15:51 IST)
Updated Date: Tue, 06 Oct 2020 (16:00 IST)
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், அறிவியல், ஆராய்ச்சி, இலக்கியம், போன்ற துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படும் இதில் 2020ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இன்று இயற்பியலுல்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக நோபல் பரிசுகள் வழங்கும் நிகழ்வு தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது. 2020ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், ரோஜர் பென்ரோஸ், ரெயின் ஹார்ட் ஜென்சில், ஆண்டிரியா கெஸ் ஆகிய 3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
கருந்துளை பற்றிய ஆய்வுக்காக இவர்கள் மூன்று பேருக்குக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுளது குறிப்பிடத்தக்கது.