Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. சாதித்தது என்ன?

Mahendran
திங்கள், 7 அக்டோபர் 2024 (16:52 IST)
மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்கர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்கர்களுக்கு கிடைத்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன்  ஆகிய இருவரும் 11 மில்லியன் பரிசு தொகை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ ஆர்என்ஏ வை கண்டுபிடித்ததற்காக விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டு அமெரிக்கர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி டீ-சர்ட் போடக்கூடாது! மீறினால் நாங்கள் வழக்கு போடுவோம்! - ஜெயக்குமார் எச்சரிக்கை!

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மக்கள் கூடும் இடங்களில் இனி வரும் காலங்களில் கவனம் செலுத்துங்கள்! - நடிகர் விஜய் கோரிக்கை!

மெரினா வான் சாகச நிகழ்ச்சிக்குப் பிறகு 18 டன் குப்பை அகற்றம்… பணியில் ஈடுபட்ட 128 தூய்மைப் பணியாளர்கள்!

3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. மிக கனமழை பெய்யும் என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments