அந்தமான் தீவுகளில் காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது.
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது போர்ட்பிளேயரில் இருந்து 199 கிலோ மீட்டரில் மையம் கொண்டிருந்தது.
இந்நிலநடுக்கம் ரிக்டரில் 5 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக குலுங்கின. பொதுமக்கள் அச்சமடைந்து வீதிகளுக்கு வந்தனர். அப்போது கடல் எப்போதும் போல் இல்லாமல் சற்று சீற்றமாக இருந்தது.
ஆனாலும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. சுனாமி அபாயம் இல்லை என தெரியவந்துள்ளது.